Thursday, June 16, 2005

பருவே போ....போ....

பரு என்றால் முகத்தில்தான் வரும் என பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். முகத்தில் மட்டுமின்றி கழுத்து, முதுகு, மார்புகள் ஆகிய இடங்களிலும் இது வரும். பருக்களிலிருந்து சீழ் வடிவதுண்டு. வடுக்கள் தோன்றுவதும் உண்டு. பருக்கள் ஏன் வருகின்றன? அதன் அடிப்படைக் காரணங்கள் என்ன என தெரிந்துகொள்ளுங்களேன்.

நமது முகப்பகுதி சருமம் மூன்று முக்கிய அடுக்குகளால் ஆனது. மேலடுக்கின் கீழ்ப்பகுதியில் செபேஷியஸ் கிளாண்ட் என்ற எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இந்த எண்ணெய்ச் சுரப்பி களிலிருந்து சுரக்கும் சீபம், முகத்தை வறண்டு போகாமல் பாது காப்பாக வைத்துக் கொள்ளும். ஆனால் சில காரணங்களால் அதிகமாக சுரக்கும் போது பருக்கள் வந்துவிடுகின்றன. உதாரணமாக, எண்ணெய்ப் பசையுள்ள சரும அமைப்பு உள்ளவர்களுக்கும், எண்ணெய்ப் பசை மற்றும் வறண்ட சரும அமைப்பு கலந்த அமைப்பு உள்ள வர்களுக்கும் முகத்தில் பருக்கள் அதிகளவில் வரும். எண்ணெய் சுரந்து சருமத்தின் மேற் புறத்திற்கு வரும்போது சருமத்துவாரங்கள் அழுக்கு மற்றும் புறக்காரணிகளால் அடைபட்டுப் போனால், மேலே கசிய முடியாமல் உள்ளேயே தங்க ஆரம்பித்து விடும். இதனோடு பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் ஆகியவை சேர்ந்து அழற்சியை உண்டாக்கி சீழ்பிடிக்கச் செய்து பருவாக திரளும். எண்ணெய்ப் பசையின் மீது அழுக்கு படியும் போது அது உலர்ந்து கரும்புள்ளியாக மாறிவிடுகிறது. எண்ணெய்ப் பசை அதிகரிப்பு பரம்பரையினாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் வருகிறது. பெற்றோர் இருவருக்குமே இப்பிரச்சினை இருந்தால் பிள்ளைகளுக்கு வரும். இளம் பெண்களுக்கு பதினோறு வயதிலும், பையன்களுக்கு பதிமூன்று வயது வாக்கிலும் ஆன்ட் ரோஜென் என்ற ஹார்மோனால் தூண்டப்பட்டு பருக்கள் வருகின்றன. பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு பத்து மடங்கு அதிகமாக பருக்கள் வருகின்றன. கோரின் பாக்டீரியம் அக்னீஸ் என்ற பாக்டீரியாக்கள் தங்கள் பங்குக்கு தோலில் உள்ள கொழுப்பை சிதைத்து அழற்சி உண்டாக்கும் ரசாயனங்களாக மாற்றிவிடுகின்றன. இவையும் பருக்களாக மாறி வெளிவரும்.

வலிப்பு, டி.பி. நோய்க்காக சாப்பிடும் சில மாத்திரைகள், அலர்ஜpயை உணடாக்கும் மேக்அப் சாதனங்கள், வாய் வழி சாப்பிடும் மருந்துகள் ஆகியவை முகப்பருக்களை உண்டாக்குகின்றன. கொழுப்புப்பொருட்கள், சாக்லேட், குளிர் பானங்கள் ஆகியவையும் பருக்களை உண்டாக்குகின்றன. பருக்கள் இருந்தால் கண்டிப்பாக பொடுகுத் தொல்லை வரும். தடுப்பு முகத்தை தினமும் நான்கு முறையாவது கழுவ வேண்டும். மசாஜ் செய்வது போல கையை உருட்டித் தேய்க்க வேண்டுமே தவிர, நகத்தால் கிள்ளி தேய்க்கக் கூடாது. இவ்வாறு தேய்த்தால் எண்ணெய்ச் சுரப்பி தூண்டப்பட்டு பருத் தொல்லை அதிகமாகும். பருக்களை தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்களை தவிர்க்க வேண்டும். பருக்களைக் கிள்ளக்கூடாது. இதனால் பருத்தொல்லை அதிகாpக்குமே தவிர குறையாது.

By Dr.ஷர்மிளா

0 Comments:

Post a Comment

<< Home