Thursday, June 16, 2005

வயிற்றுக்குள் சுருக்... சுருக்...

பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதாந்திர பிரச்சினைகளில் முக்கியமானவை:-

ஒழுங்கற்ற மாத விலக்கு, வலியோடு கூடிய மாதவிலக்கு, தடைப்பட்ட மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவற்றை குறிப்பிடலாம். ஒரு மாதத்திற்குள் இரண்டு தடவை மாத விலக்கு வருவதும், சரியான நேரத்தில் வராமல் ஒரு மாதத்திற்கு மேலும் 10-15 நாட்கள் கழித்து மாதவிலக்கு வருவதற்கு ஒழுங்கற்ற மாத விலக்கு என்று பெயர். ஒரே மாதத்தில் இரண்டு தடவை மாதவிலக்கு வருவதற்கு உடம்பில் வெப்பம் ஏற்படுதல், உஷணமான உணவுகளை உண்பது, சில மாத்திரைகளின் ரசாயனங்கள், கல்லீரல் பாதையில் ஏற்படுகின்ற தடைகள், சத்தற்ற ஆகாரம் போன்றவை தான் காரணங்களாகும்.

இது போலவே நீண்ட நாட்கள் கழித்து மாத விலக்கு வருவதற்கு உடம்பில் ரத்தம் குறைவு, ரத்தத்தில் குளிர்;ச்சி மற்றும் உயிர் சத்து ஓட்டத்தில் தடை ஏற்படுவதும்தான் காரணமாகும். வலியோடு ஏற்படும் மாதவிலக்கிற்கு உயிர் சத்தும், ரத்தமும் எளிதாக கர்ப்பப்பையைக் கடந்து செல்லாததுதான் காரணம். இது தவிர அளவிற்கு அதிகமாக குளிர்ச்சியான உணவுகளை உண்பது, உடம்பில் வெப்பதத்தை தேக்கி வைத்துக் கொள்வது போன்ற காரணங்களும் இந்த பாதிப்பினை தோற்றுவிக்கலாம். தடைப்பட்ட மாதவிலக்கு மற்றும் மாதக் கணக்கில் மாதவிலக்கு வராமல் இருப்பதற்கும் காரணங்கள் உள்ளன. ரத்தக் குறைவினால் அல்லது மாதவிலக்கு வரும் பாதையில் வேறு சில வியாதியால் தடை ஏற்படுவது போன்றவை தான் இதற்கு காரணமாகும். ரத்தம் தடை படுவதினால் பல மாதங்களுக்கு மாதவிலக்கு வராது. சில நேரங்களில் அடி வயிற்றில் பந்து போல கட்டியாக தென்படலாம். வயிற்றில் சுருக்... சுருக்... என்று அடிக்கடி வலிக்க லாம். மார்பகத்தில் கூட இதனால் வலி இருக்கலாம். அதிக ரத்தப் போக்கினால் அதன் பின்விளைவாகவும் மாத விலக்கு நீண்ட நாட்களுக்கு வராமல் போகலாம்.

அடுத்து இன்றைய பெண்களில் பலருக்கு இருக்கின்ற பிரச்சினை வெள்ளைப் படுதலாகும். இவ்வாறு பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அலோபதி, சித்தா, யுனானி, ஹேhமியோ என்று பல சிகிச்சை முறைகள் இருப்பது உண்மைதான். பெண்களின் மாதவிலக்கு மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சினைகளுக்கு அந்தந்த பிரச்சினைகளுக்கு காரணமான மெரிடினியன்களை (புள்ளிகளை) கண்டறிந்து அகுபங்க்சர் ஊசி மூலம் சிகிச்சை செய்தால் பூரண குணமடையலாம்.


by Dr.ஷர்மிளா

0 Comments:

Post a Comment

<< Home