Thursday, June 16, 2005

சிரிக்க முடியலையா....?

மனித பிறவியின் உயர்ந்த அம்சமாக கருதப்படுகின்ற பெண்மைக்குத்தான் அடுக்கடுக்காக எவ்வளவு சோதனைகள்?

பெண்களின் உடல் சார்ந்த சில பாதிப்புகள் அவர்களின் அன்றாட பணிகளைகூட சரியாக செய்ய முடியாத, மற்றவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலாத பிரச்சினையைகூட உண்டு பண்ணிவிடலாம். ஏன்... மற்றவர்கள் மாதிரி கல கலவென்று சிரிக்க முடியாத, தும்மல் வந்தால் தும்மி வைக்க..., இருமல் வந்தால் இரும முடியாத நிலைமையை உண்டாக்கலாம். ஆம் சில பெண்கள் சிரித்தால், இருமினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும். ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம். மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும். சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும். சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தர மாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஜpகமகஇநி போன்ற உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.

சரி... இத்தகைய பிரச்சினைக்கு என்ன செய்யலாம்? இந்த பிரச்சினைகளுக்கு என்றே பிரத்தியேக மருந்துகள் உள்ளன. அவற்றை உட்கொள்ளலாம். மகப்பேறு மருத்துவராக இருப்பதுடன் சிறுநீர், சிறுநீரகம் பற்றி நிபுணத்துவம் பெற்ற மருத்துவரால்தான் இப்பிரச்சினைக்கு ஆலோசனை தரமுடியும். மருந்துகளால் குணமடையாதபோது அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வாகும்.

by Dr.ஷர்மிளா

0 Comments:

Post a Comment

<< Home